tm

new

Browsing Category

Mobile Phone Tips

Sunday 30 September 2018

ஓட்டுநர் உரிமம் கட்டணங்களை ஆன்லைன் மூலம் இனி செலுத்தும் வசதி அறிமுகம்

ஓட்டுனர் உரிம கட்டணத்தை ‘ஆன்-லைனில்’ செலுத்தும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் வரி ஆகியவை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை இணையதளம் மூலம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 


தற்போது, விண்ணப்பதாரர்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான கட்டணத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக செலுத்தி வருகின்றனர்.பழகுனர் உரிமம், நிரந்தர ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுனர் உரிமம் பெறுதல் போன்ற பணிகளுக்கான கட்டணம் முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து ‘ஆன்-லைன்’ மூலம் செலுத்தும் வசதி நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. 


இதனை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.மனுதாரர்கள் நேரடியாக https://parivahan.gov.in/parivahan/ இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ‘ஆன்-லைன்’ மூலம் செலுத்தி பயன்பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ‘ஆன்-லைன்’ மனுவை பூர்த்தி செய்த பிறகு, அதற்கான கட்டணத்தையும் ‘ஆன்-லைனில்’ செலுத்தலாம்.வங்கி இணைய சேவை (நெட் பேங்கிங்), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவும் பண பரிவர்த்தனை செய்யலாம்.


 விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலம் ரசீதை உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம்.செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டு அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று தகுந்த தேர்வில் கலந்துகொண்டு, புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.


 இதன் மூலம், கால விரயம் தவிர்க்கப்படுகிறது.மேலும் அலுவலக பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைந்து, இதர பணிகளில் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும். போக்குவரத்து துறையின் படிப்படியான முன்னேற்றத்தில் இது ஒரு மைல்கல் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday 22 September 2018

நாளை முதல் பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

நாளை முதல் பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவுபெறுவதைத் தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 தமிழக அரசின் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் கடந்த 10 -ஆம் தேதி (செப்.10) தொடங்கி நடைபெற்று வருகின்றன. 


 மொஹரம் பண்டிகை என்பதால் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை நாளாகும். இதன் காரணமாக சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன.


 இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (செப். 23) முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 3 -ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Friday 21 September 2018

காந்தியின் சில சிந்தனைகள்

காந்தி ஜெயந்தியை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில்  அவரின்  சிந்தனைகளையும் , கொள்கைகளையும் பின்பற்றும்   வகையில் சிலவற்றை  நினைவில் கொள்வோம்.

அசைக்கமுடியாத மனவுறுதியே உண்மையான பலமாகும். பிறரால் எதிர்க்க முடியாத வலிமையையும், தைரியத்தையும் கடவுளை சரணாகதி  அடைந்தாள் மட்டுமே பெறமுடியும்.

தெய்வத்தின் கணக்கு புத்தகத்தில் நமது செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் படித்தவையும் பேசியவையும் அல்ல. 

எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் உண்மையை பேசும் மன உறுதி வேண்டும். பொய் நிலைத்திருக்கமுடியாது உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

உனக்கு நீயே நீதிபதியாக இருக்க கற்றுக்கொள். தனக்கு தானே நல்லவனாக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.

புகழ், இகழ் இவ்விரண்டிலிருந்தும் யாராலும் தப்ப முடியாது. கடமையை மிகசசரியாக செய்பவர்கள் புகழ் வந்தாலும், இகழ் வந்தாலும் இரண்டையும் ஒன்றுபோல ஏற்றுகொள்ளும் மன பக்குவத்தை பெறுகின்றனர்.

பிரார்த்தனை உண்மையானதாக இருக்க வேண்டுமானால் வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் அலையாமல் ஊன்றி நிற்க வேண்டும். சத்தியத்தை தெய்வமாக கருதி வணங்குவதே சிறந்த மார்க்கமாகும். 

மனிதன் வேறு அவனது செயல் வேறு . நற்செயலை புகழ்வோம், தீய செயல்களை இகழ்வோம். ஆனால் செய்தவன் நல்லவனாக இருந்தால் மதிப்பளிப்போம்.தீயவனானால் இரக்கம் காட்டுவோம் 

இதய தூய்மையுடன்  இருந்தால்  இறைவன் நமது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பான். உள்ளத்தூய்மை இல்லாதவர் செய்யும் பிரார்த்தனை விழலுக்கு இறைத்த நீரை போல் பலனளிக்காமல் போகும். 

கோயில் மட்டும் பக்திக்கும் வழிப்பாட்டிற்கும் உரியதல்ல, நாம் பணிபுரியும் இடமும் வணங்கவேண்டிய கோயிலாகும்.

ஆண்மை என்பது மற்றவரிடம் வீரத்துடன் நடப்பது மட்டுமல்ல. சந்தர்ப்பங்களுக்கு அடிமையாகாமல் சந்தர்ப்பத்தை தனக்கு அடிமையாக்கிக் கொள்பவனே ஆண்மையுடைய வெற்றி வீரன்.

பகைவனை மன்னிக்க தெரியாதவன் உலகில் அடையக்கூடிய உயர்ந்த இன்பத்தை இன்னும் அடையவில்லை என்று தான் சொல்லவேண்டும். எனவே எப்படிப்பட்ட பகைவனையும் மன்னிக்கும் குணத்தினை வளர்த்துக்  கொள்வது அவசியம்மாகும். 

தனது செயலின் மூலம் கெட்டவர்களைக்கூட கொடியவர்கள்   என கூறமுடியாது. ஆனால் மனதால் கெட்டவர்கள் தான் மிகவும் கொடியவர்கள் என கூறவேண்டும். 

கடவுளிடம் பேரம் பேசாதீர்கள். அவரை சரணாகதி அடைவதே மேன்மையான வாழ்வு தரும். கடவுளிடம் முழுமையான நம்பிக்கை வைப்பவர்கள் யாரிடமும் கோபமோ அல்லது வெறுப்போ காட்டமாட்டார்கள்.பகைமை உணர்வு அற்று போகும். அவர்கள் தீமையை மட்டும் வெறுப்பார்களே  தவிர, ஒருபோதும் தீயவர்களை வெறுக்கமாட்டார்கள், அவர்களை நல்வழிக்கு மாற்றுவார்கள்.  

பொதுவாக கண் பார்வை அற்றவர்களை தான் குருடர்கள் என்று எண்ணுகிறோம், அது தவறு எவனொருவன் தான் செய்த குற்றத்தை பிறர் அறியாத படி மறைத்து இன்பம் காண்கிறானோ அவனே கண்ணிருந்தாலும் குருடனாகிறான். 


மனிதன் தனக்கு தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வாழப் பழகிக்  கொள்ளவேண்டும். அந்த மனிதனே பூரண சுகந்திரம் பெற்றவனாக இருப்பான்.


பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கவேண்டிய உண்மையான சொத்து அவர்களை நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக  வளர்ப்பதும், அவர்களுக்கு வேண்டிய கல்வியினை தருவதும் தான். இவ்விரண்டும் இருந்தால் அவர்கள் இறுதி வரை மகிழ்ச்சியாக வாழமுடியும்.  

பிறரை இகழ்ந்து பேசுபவர்கள் உடலில் உயிரிருந்தும்  இல்லாதவன் போலாகிறார்கள். ஒருவரை இகழ்தல் அல்லது அவர் சார்ந்த மதம், இனம் போன்றவற்றை இகழ்தல் அற்ப குணமே அதனை ஒருபோதும் செய்தல் கூடாது. 

மேற்சொன்ன மகாத்மா காந்தியின் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்

காந்தி பற்றிய வினாக்கள்

1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?

➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி

2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?

➯ கரம் சந்த் காந்தி

3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன? 

➯ புத்திலிபாய்

4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?

➯ 02-10-1869

5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2015 அன்று நாம் கொண்டாடுகிறோம்?

➯ 146 வது பிறந்தநாள்

6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?

➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்

7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?

➯ அரிச்சந்திரன் நாடகம்

8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?

➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்

9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?

➯ மே 1883

10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?

➯ 13க்கும் 14க்கும் இடையில்

11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?

➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்

13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?

➯ 1888

14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?

➯ 24ம் வயதில்

15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

➯ 21 ஆண்டுகள் (1893-1914)

16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?

➯ நிறவெறி கொடுமைக்கு

17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?

➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்

18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?

➯ 09-01-1915

19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)

20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?

➯ கோபால கிருட்டின கோகலே

21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?

➯ மிதவாதகொள்கை

22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?

➯ இந்திய தேசிய காங்கிரஸ்

23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?

➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)

24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?

➯ கேதா ஆர்ப்பாட்டம்

25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?

➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்

26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?

➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்

27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?

➯ ஒத்துழையாமை இயக்கம்

28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?

➯ சட்டமறுப்பு இயக்கம்

29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?

➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்

30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?

➯ ஒத்துழையாமை இயக்கம்

31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?

➯ உப்புசத்தியாகிரகம்

32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?

➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது

33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?

➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்

34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?

➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக

35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?

➯ செய் அல்லது செத்துமடி (do or die) 

36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?

➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள் 

37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?

➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)

38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?

➯ 30-01-1948

39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ தியாகிகள் தினம்

40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?

➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence ) 

41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?

➯ நவஜீவன்

42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?

➯ குஜராத்தி மொழியில்

43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?

➯ சத்தியசோதனை

44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?

➯ மன்மோகன் தேசாய்

45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன? 

➯ My Experiments with Truth.

46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?

➯ யங் இந்தியா

47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?

➯ இந்தியன் ஒப்பீனியன்

48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?

➯ இரவீந்திரநாத் தாகூர்

49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?

➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்

50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?

➯ திரு.வி.க

51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?

➯ 2338 நாட்கள்

52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?

➯ எரவாடா சிறை (பூனா)

53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?

➯ 78 வயது

54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்

➯ காந்தி

55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?

➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்

57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?

➯ காந்திஜியின் பிள்ளைகள்

58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?

➯ ஹரிலால்

59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?

➯ ஹரிலால்

60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?

➯ காந்திஜி

62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?

➯ காந்திஜி

64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்

➯ காந்திஜி

65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்

➯ காந்திஜி

66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன் 

➯ ஹரிலால்

67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர் 

➯ காந்திஜி

68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்

➯ மணிலால்

69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்

➯ மணிலால்

70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்

➯ மணிலால்

71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்

➯ மணிலால்

72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்

➯ மணிலால்

73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்

➯ ஹரிலால்

74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்

➯ சிறைச்சாலை 

75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்

➯ சிறைச் சாலை வளாகம்

76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்

➯ கஸ்தூரிபாய்

77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.

➯ கஸ்தூரிபாய்

78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்

➯ காந்திஜி

79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்

➯ காந்திஜி

80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்

➯ காந்திஜி

81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?

➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்

10,11,12 வகுப்புகளுக்கு செப்டெம்பர் மாத துணைத் தேர்வு ரத்து

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு


கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


 உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு,


 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும். இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். 


மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 


குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார்.


 அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது. 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.


Thursday 13 September 2018

காந்தியின் பிறந்த நாள் போட்டி பள்ளிகளில் நடத்த உத்தரவு

காந்தியின் 150-ஆவது பிறந்த நாள்: பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் தொடர்பான போட்டிகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


 இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 


மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் கொண்டாடும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும். 


மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை தத்துவம், குறிக்கோள், காந்திய சிந்தனைகளான உண்மை, அமைதி, அஹிம்சை, தூய்மை போன்ற நெறிகளை உள்ளடக்கிய மேடை நாடகத்தை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் செப்.17-ஆம் தேதி முதல் செப். 20-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 


இதில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி வேலை நேரத்திலேயே போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Tuesday 11 September 2018

பெட்ரோல் டீசல் விலை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

பெட்ரோல் விலை பற்றிய இரண்டு விசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 | )பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது மத்திய அரசு போடுகின்ற வரியினால் தான் விலை ஏறுகிறது என நாம் அனைவரும் நினைக்கின்றோம். அது பற்றிய உண்மைகளை பார்ப்போம்.. 

 ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மத்திய, மாநில அரசுகள் போடும் வரி விபரம், ஒரு லிட்டர் உற்பத்தி விலை 36.93 ரூபாய் . மத்திய அரசு வரி விதிப்பு ரூ 23.03 ஒரு லிட்டருக்கு . 36.93 +23.03= 59.96  

குறிப்பு (ரூ23.03 - வில் 40% அதாவது ரூ 9.21 வை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தந்துவிடும்). மத்திய அரசு வரி விதிப்புக்கு பின் விலை 59.96. ரூபாய்... ரூ20.36 வரியாக மாநில அரசு வசூலிக்கிறது. 


 அதாவது 59.96 + 20.36 = 80.32 மாநில அரசின் வாட் வரி விதிப்புக்கு பின் 80.32-க்கு மக்கள் வாங்குகின்றனர். மொத்தத்தில் மத்திய அரசாங்கம் பெறும் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 13.82. மட்டுமே மாநில அரசாங்கம் பெறும் வரி 20.36 +9.21 = ரூ29.57 உற்பத்தி விலை - = 36.93 மத்திய அரசு வரி = 13.82 மாநில அரசு வரி = 29.57 ======== 80.32 ======== 

நண்பர்களே எத்தனைப் பேர்களுக்கு இந்த உண்மை தெர்யும். 


 2) இந்தியா 34 ரூபாய்க்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்கிறது. என்ன நியாயம் என்பது போல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சராசரி இந்தியர்கள் மன நிலைப்படி ஒரு மாபெரும் ஏமாற்று வேலையை மத்திய அரசு செய்வதாக தோன்றும். தோன்றுவது இயல்புதான். இது புதிதாக தற்போது தான் செய்வது போல சொல்வது அப்பட்டமான பொய். இந்தியர்களுக்கு 80 ரூபாய். 

வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி 1லிட்டர் =34 ரூபாய். இது உண்மை. "மெய்பொருள்" அதாவது உண்மையை அறிந்து கொள்ள முயற்சிப்போமாக. ஏற்கனவே பெட்ரோல் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை அறிந்தோம். கச்சா எண்ணெயாக வந்து அதை Refind செய்யும் வேலையை மட்டுமே இந்தியா செய்து கொண்டு உள்ளது. அதாவது 2 லட்சத்து 4 ஆயிரம் கோடிக்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. 

JOB work என்ற அடிப்படையில் தான் இது நடக்கிறது. எந்த ஏற்றுமதிக்கும் வரி கிடையாது என்பதை அறியவும். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். ரூ 34 க்கு மேல் அனைத்தும் மேலே நான் கூறிய வரிகளுக்கு பின்பே 80 ரூபாய் ஆகிறது. வெளிநாடுகளுக்கு அனுப்பும் எந்த பொருளுக்கும் வரி கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.

 மிக முக்கியமான விசயம் : இந்த விலையில் , இதே முறையில், ஏற்றுமதி செய்வது பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது.

Sunday 2 September 2018

இதை படிச்சீங்களா இனி ஓட்டலில் சாப்பிட எண்ணமே வராது

தயவு செய்து படியுங்கள் ‘ஓட்டலில் சாப்பிடாதீங்க’ ஒரு முன்னாள் ஓட்டல் உரிமையாளர் தனது தொழில் ரகசியங்கள்(!) பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார். அதிர்ச்சி ரகம் தான் இவரது முகநூல் ஸ்டேட்டஸும். 

1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்து இல்லை. 

2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை. 

2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம். ஆனால், அது தடை செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிவப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும்.


 3. சோயா சாஸ்... விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை. மாறாகத் தண்ணீரோ அல்லது ஒரு வாரத்துக்கு முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ கலந்து செய்கிறோம். 


4. எந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம். 


5. ஃப்ரைடு ரைஸ் செய்யும் போது சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம். 

6. இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஃப்ரைடு ரைஸ் செய்யும் சட்டியை நாங்கள் ஒரு வாரத்துக்குக் கழுவ மாட்டோம். கழுவி எண்ணெய் பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும். 

7. மோனோசோடியம் க்ளூட்டமேட்... இதை அதிகமாக பயன்படுத்துகிறோம். உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள் என்று பலரும் சொல்கிறார்கள். இதைத் தொட்டு நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும். சோதித்துப் பாருங்கள். 

8. மிளகுத் தூளில் வெண்மை நிறத்துக்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.

 9. காலாவதியான தக்காளி சாஸ் விலை கம்மியாகக் கிடைப்பதால் அதையே உபயோகப்படுத்துகிறோம்.

 10. சில்லி சாஸ்... அதை அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும். எல்லாம் மசாலா மணத்தில் மறந்து போய்விடும். 5 நிமிடத்தில் 8 பிளேட் தயாராகிவிடும். ஒரு பிளேட் 50 ரூபாய் என்றால் கூட 400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் சாப்பிட்டு என் உடலும் கெட்டுவிட்டது. 

மற்றவர்களின் உடல் நலனையும் கெடுக்கும் இந்த வேலை வேண்டாம் என என் மனசாட்சி உறுத்தியதால், அதை மூடிவிட்டு 12000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக வேறு வேலைக்குச் செல்கிறேன்!- தினேஷ் (ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்) 

தயவுசெய்து இந்த செய்தியை அதிகமாக பகிருங்கள்!

Saturday 1 September 2018

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரி பார்த்துக் கொள்ளுங்கள்

*முக்கியஅறிவிப்பு* """""""""""""""'"''"''"''''''"""""""""""" *வருகின்ற 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.* 

 *இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் *வாக்காளர் சிறப்பு முகாம்* *காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.* 

 *இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள்* *அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8* *ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.*

48 MP CAMERA MOBILES NEW 1

48 MP CAMERA MOBILES NEW 1. Redmi Note 7S (Sapphire Blue, 64 GB)  (4 GB RAM) 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB 16...